இனங்கண்ட வாய்ப்புள்ள துறைகளுக்கென துறைசார் மதியுரைக் குழுக்களை அமைக்கும் செயன்முறையில் அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது. இக்குழுக்களின் தலைவர், செயலாளர் ஆகியோர் தனியார் துறையிலிருந்து தெரிவு செய்யப்படுவர். அபிவிருத்திப் பகுதிகளின் பணிப்பாளர்கள் இக்குழுக்களின் கூட்டிணைப்பாளர்களாகத் தொழிற்படுவர்
இக்குழுக்களின் குறிக்கோள், புதிய வரவு செலவுத்திட்ட யோசனைகளதும் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள், விதப்புரைகளைத் தயாரிப்பதற்கு கைத்தொழிற் தலைவர்களின் இடுகைகளைப் பெற்றுக் கொள்வது இக்குழுக்களின் குறிக்கோள் ஆகும். அத்துடன், கிடைக்கப்பெறும் வெளிநாட்டு, உள்ளூர் உதவி நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டு உலகளாவிய சந்தையிற் போட்டியிடுவதற்கு தொழிநுட்பவியலைத் தரமுயர்த்துவதுடன் இப் பெறுமதித் தொடரை விருத்தி செய்வதும் ஆகும்.